நளின் பண்டார எம்.பி பயணித்த ஜீப் வண்டி மோதி விபத்து: எட்டு நாட்களின் பின் இளைஞர் உயிரிழப்பு

0
70

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியில் மோதியதில் காயமடைந்த இளைஞன் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த எட்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த இளைஞனின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் இன்று இரவு 09:00 மணியளவில் இறக்கும் நிலையில் உள்ள மூன்று நபர்களுக்கு தானமாக வழங்கப்படவுள்ளது.

இளைஞனின் பாதுகாவலர்கள் அவர் உயிருடன் இருந்தபோது செய்த உயில் பிரகடனத்தின்படி இந்த உன்னத செயலுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பயணித்த சொகுசு ஜீப் வண்டி அதிவேகமாக ஓடியதாகவும், மழைக்காலத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞரின் மரணச் செய்தி தந்தையை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்