திருகோணமலையில் சாலையோரம் உணவு கடை வைத்துள்ள தாயின் நெகிழ்ச்சி செயல்!

0
58

திருகோணமலையில் சாலையோரம் உள்ள உணவு கடை ஒன்றில் எழுதப்பட்டுள்ள வாசகம் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவு கடையில் உள்ள பதாகை ஒன்றில் “பணமின்றி பசியென்று வரும் ஏழைக்கு என்னிடம் உணவுண்டு” என எழுதப்பட்டுள்ளது.

இதனை கண்ட நபரொருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் குறித்த உணவு கடையின் உரிமையாளரான தாயிடம் இப்பிடி குடுக்குறதால உங்களுக்கு நஷ்டம் இல்லையா என்று கேட்டுள்ளார்.

அந்த தாய் கூறிய பதில் நானும் கஷ்டப்பட்டவள் தான் ஒரு கஷ்டப்பட்டவருக்கு தான் கஷ்டப்படுபவர்களின் அருமை விளங்கும் என்று தெரிவித்துள்ளார். குறித்த தாயின் செயலை முகநூலில் பலரும் பாராட்டி வருகின்றனர்.