எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு; CID கால அவகாசம் கோரல்

0
33

கொழும்பு நீதவான் நீதிமன்றம் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று குறித்த வழக்கு தொடர்பான விராசணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் போது ​​குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி இந்த விசாரணைகள் தொடர்பான விபரங்களை முன்வைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு கோரியுள்ளார்.

இந்நிலையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான் விசாரணைகளை உடனடியாக முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்ததுடன் அதன் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்கும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.