ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால செயற்படுவதைத் தடுத்து மற்றுமொரு தடை உத்தரவையும் பிறப்பித்தார்.
மேலும், தற்காலிக தலைமைச் செயலர் எடுத்த முடிவுகளை அமுல்படுத்த தடை விதித்து நீதிமன்றம் மற்றொரு தடை உத்தரவு பிறப்பித்தது.
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கமைய கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன்விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்தத் தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.