உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை – பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய தெரிவித்தார் – மல்கம் ரஞ்சித்

0
41

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது  குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு நெருக்கமான அமைப்புகளை சேர்ந்த நபர்களை கைதுசெய்யவேண்டியிருக்கும் என்பதால்  ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை தன்னிடம் தெரிவித்தார் என கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விசாரணைகளை ஆரம்பிக்கும் ஆர்வத்தை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை எனவும் கர்தினால் விமர்சனத்தை முன்வைத்தார்.