நடிகைக்கும் கணவனுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

0
42

கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரான நெல்லி ஜோன்சன் ஆகியோரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க  புதன்கிழமை (17) உத்தரவிட்டார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் இவர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார். 

சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.