கோட்டை ரயில் நிலைய மேடையை உடைத்துக் கொண்டு சென்ற ரயிலின் சாரதி பணி இடைநிறுத்தம்

0
184

சிலாபத்துக்குப் பயணிப்பதற்காகக் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட ரயில் மேடையை உடைத்துக் கொண்டு சென்று சேதங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் அந்த ரயிலின் சாரதி தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதா க ரயில்வே திணைக்கள பிரதி முகாமையாளர் என். ஜே. இதிபொல தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று (15) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் ஒன்று  நேற்று திங்கட்கிழமை (15) பிற்பகல் கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் நிறுத்த முயற்சித்தபோது அங்கிருந்த தடுப்பையும் ரயில் மேடையையும் உடைத்துக் கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

சிலாபத்துக்குப் பயணிப்பதற்காகக் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட ரயில் மேடையை உடைத்துக் கொண்டு சென்று சேதங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் அந்த ரயிலின் சாரதி தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதா க ரயில்வே திணைக்கள பிரதி முகாமையாளர் என். ஜே. இதிபொல தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று (15) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் ஒன்று  நேற்று திங்கட்கிழமை (15) பிற்பகல் கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் நிறுத்த முயற்சித்தபோது அங்கிருந்த தடுப்பையும் ரயில் மேடையையும் உடைத்துக் கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.