மியான்மரில் சிக்கிய இலங்கையர்கள் தாய்லாந்தில்

0
45

மியான்மரில், மியாவாடியில் சைபர் பயங்கரவாத குழுக்களின் பிடியில் இருந்து  விடுவிக்கப்பட்ட 8 இலங்கையர்களும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் அவர்கள் இலங்கை வரவுள்ளதாக தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மார் குடிவரவு அதிகாரிகளால் இன்று காலை தாய்லாந்து நட்புறவுப் பாலம் ஊடாக   இலங்கையர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் குறித்த இலங்கையர்கள் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அடுத்த சில தினங்களில் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.