வானிலையில் மீண்டும் மாற்றம்!

0
66

நாளை (31) நாடு முழுவதும் பல பிரதேசங்களில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களுடன் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இவ்வாறு மனித உடலால் உணரக்கூடிய அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அறிவுறுத்தியுள்ளது.