இந்திய உயர்ஸ்தானிகர் – பெசில் இடையே விசேட சந்திப்பு

0
73

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பெசில் ராஜக்சவை சந்தித்துள்ளார்.

இதன்போது இரு தரப்பு உறவுகள், அரசியல் நிலைமைகள், இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க விஜயம்
இலங்கையில் தேர்தல் நடைபெறக்கூடிய சூழ்நிலையில் இந்திய பிரதிநிதிகள் இலங்கை அரசியல் தலைமைகளை அண்மைக்காலமாக சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா விஜயம் செய்திருந்த பெசில் ராஜபக்ச அண்மையில் நாடு திரும்பியிருந்தார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.