கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை! சிங்கள தாயார் கண்ணீர் மல்க பேட்டி.. வெளியான தகவல்கள்

0
113

கனடா தலைநகர் ஒட்டாவாவில் துப்பாக்கியால் சூட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பப் பெண் இலங்கையில் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க என்ற பெண்ணின் தாயார் கண்ணீர் மல்க இலங்கை ஊடகம் ஒன்றிடம் இன்றையதினம் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்தாவது,

“ஏதோ நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன். பௌத்தத்தை தீவிரமாக கடைப்பிடித்தார். விகாரை விகாரையாக சென்ற பிள்ளைதானே….”

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவன் இல் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.

இந்த படுகொலை சம்பவம் கடந்த புதன்கிழமை (06-03-2024) கனடா நேரப்படி இரவு 11 மணிக்கு இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தின் போது 35 வயதுடைய தாய், அவரது 4 பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர்.

சம்பவத்தின் போது, குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, ​​வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை.

அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே யாரோ அவரைத் தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்ததால், அப்போது தாக்கிய நபரை அடையாளம் காண முடியவில்லை.

எனினும், தம்மைத் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க விக்கிரமசிங்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் கேட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையும் உணர்ந்தார்.

அப்போது, ​​தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை தொடர்பில் அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் அயல் வீட்டு பெண்ணொருவர் தெரிவித்தது,

கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா பொலிஸார் முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.   

இதேவேளை, பொலிஸ் பிரதானி எரிக் ஸ்டப்ஸ் சம்பவம் குறித்து தெரிவித்தது,

“எங்கள் குழு சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர்.

அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தப்போது 6 பேர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், இந்த குடும்பங்கள் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு….