இலங்கை பொருளாதாரம் வழமைக்கு திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது.. சர்வதேச நாணய நிதியம்!

0
94

இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வழமைக்கு திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இன்றையதினம் (07-03-2024) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் செயற்படுவதைக் காட்டும் வகையில் இலங்கை பொருளாதாரம் வழமைக்கு திரும்பியுள்ளது மகிழச்சியளிப்பதாக பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.