விமானி ஆக ஆசை… யாழ். மாணவிக்கு ஆலோசனை வழங்கிய விமானப்படை தளபதி

0
70

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் கல்விக் கண்காட்சியும், விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்வுகளும் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றையதினம் (07-03-2024) குறித்த கண்காட்சியை பார்வையிட்ட யாழ்ப்பாண மாணவியொருவர் தனக்கு விமானி ஆக விருப்பம் உள்ளதாகவும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களிடம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவிக்கு தேவையான ஆலோசனைகளையும் நினைவுச் சின்னம் ஒன்றினையும் இலங்கை விமானப்படையின் தளபதி வழங்கி வைத்துள்ளார்.