‘ஈழத்து பெண்ணை தான் திருமணம் செய்வேன்’ தூசி தட்டப்படும் சீமானின் காதல் கதை: மிரட்டும் விஜயலட்சுமி; இதற்கு கிளைமாக்ஸ் தான் என்ன?

0
91

காதல் பூத்த தருணம்

நடிகை விஜயலட்சுமி பிரண்ட்ஸ் படத்தில் நடித்து புகழ்பெற்றவர். “வாழ்த்துகள்” பட காலத்தில் சீமான் – விஜயலட்சுமி காதல் உருவானது என்கிற பேச்சு உண்டு.

2008இல் சீமான் இயக்கமாக கட்சியாக தனிநபராக களமாடிய காலத்தில் திருமணம் செய்து கொண்டார் என்றார் நடிகை விஜயலட்சுமி.

“2008 முதல் 2011 வரை சீமானும் தாமும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம், சீமான் ஏமாற்றிவிட்டார்“ என புகார் கொடுத்தார். இந்த புகார் 2011இல் சீமானின் அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் புயலை கிளப்பியது.

ஆனால் புயல் புறப்பட்ட கையோடு பிரளயம் எதுவும் செய்யாமல் அடங்கிப் போனது. இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி பல வீடியோக்களை வெளியிட்டார்.

ஆனால் நடிகை விஜயலட்சுமி பெங்களூர் சென்று இடைவிடாமல் சீமானை விமர்சித்து சீமானின் முதல் மனைவி என உரிமை கோரி ஆயிரக்கணக்கான வீடியோ பதிவுகளை பதிவு செய்து வந்தார். ஆனால் சீமான் அதை எதையுமே கண்டுகொள்ளவில்லை. அதிலிருந்து பல காலம் சத்தமின்றி எங்கு இருக்கின்றார் என்று கூட தெரியாமல் வாழ்ந்து வந்தார்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் வந்த விஜயலட்சுமி

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திடீரென சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த புகாரை தூசு தட்டி அதே பஞ்சாயத்தை மீண்டும் கூட்டினார்.

இப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமியும் களத்துக்கு வந்தார். சென்னை பொலிஸாரும் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தியது. மருத்துவ பரிசோதனை நடத்தியது. சீமானையும் விசாரணைக்கு அழைத்தது சென்னை பொலிஸ்.

இந்த பிரச்சினையும் ஒரு வழியாக தீர்ந்து விடவே “இனி உங்கள் வாழ்க்கையில் தலையிடவே மாட்டேன். நான் செல்கின்றேன் மாமா“ என சென்றுவிட்ட விஜயலட்சுமி கடந்த இரு நாட்களுக்கு முன் தனது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் பீதியை கிளப்பினார்.

“இது தான் என்னோட கடைசி வீடியோ” தற்கொலை முயற்சியில் விஜயலட்சுமி

கடந்த வாரம் ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து விஜயலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டார் அதில் “சீமான் மாமா நான் உயரமான கட்டிடத்தின் உச்சியில் நிற்கிறேன். பெங்களூரில் நான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். நான் உங்கக்கிட்ட சண்டை போட்டாலும் உங்க மேல அன்பு இருக்கு. என்ட்ட பேசுங்க சீமான் மாமா. தமிழ்நாடு மீடியாக்களே என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வெச்சிடுங்க” எனத் தெரிவித்திருந்தார். இந்த காணொளியிம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்து பெண்ணை திருமணம் செய்ய எண்ணியதாக கூறிய சீமானின் காணொளி…👇

இலங்கையுடன் சீமானுக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்த காலகட்டத்தில் ஈழத்து பெண் ஒருவரை திருமணம் செய்ய எண்ணியதாக கடந்த 2022ஆம் ஆண்டு இணையத்தில் வைரலாகியது.

அந்த காணொளியிலும் சீமான் விஜயலட்சுமியை “மனநலம் பாதிக்கப்பட்டவர்“ என சுட்டிகாட்டியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.