துரோக செயற்பாடுகளில் ஈடுபடும் சாணக்கியன்; நாடாளுமன்றத்தில் எதிரொலி!

0
81

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் இவர் டொலர்களுக்காக நாடாளுமன்றில் கூச்சலிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(5) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.

தேசத்துரோக செயற்பாடுகள்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் “சாணக்கியன் ஒரு விடுதலைப் புலி தமிழில் ஒன்றையும் சிங்களத்தில் ஒன்றையும் சாணக்கியன் கூறுகின்றார். மீண்டும் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை கொண்டு வர முயற்சிறார்.

முழுமையாக இனவாத அடிப்படையில் பேசுவதாகவும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய கௌரவத்தை கூட வழங்கவில்லை. மேலும் சாணக்கியன் தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.” என குற்றம் சுமத்தியுள்ளார்.