மூன்று தசாப்தங்களின் பின்னர் வலிகாமத்தில் வழிபாடு நடத்த அனுமதி: விரைவில் மீள்குடியேற்றம் செய்ய ஏற்பாடு

0
97

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு 34 வருடங்களுக்கு பின்னர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயங்களில் நேற்றைய தினம் இராணுவ அனுமதியுடன் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள உயர் வலயமாக கருதப்படும் சில ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு பிப்ரவரி 23 ஆம் திகதியன்று பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

“இறுதியாக இவ்வாலயத்தில் 1990 ஆம் ஆண்டு பூஜை நடவடிக்கைகள் இடம்பெற்றன. 34 வருடங்கள் கழித்து மீண்டும் ஆலயத்தினுள் காலடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆலய சூழலை அண்டிய பகுதிகளில் தாம் மீள்குடியமர்வதற்கான நடடிக்கைகளை அரசாங்கம் வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும்” என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு பொதுமக்களுக்கு இராணவத்தினரால் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.