“என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே” சாந்தனின் நிமிடங்கள்

0
105

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் தனது சகோதரர் தன்னை பார்க்க சென்றபோது ‘என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே’என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தமை அவரது மரணத்தின் பின்னர் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

மருத்துவமனையில் சாந்தன் இருந்தபோது அவரது சகோதரர் அவரை சென்று பார்த்துள்ளார்.

கண்கலங்க வைத்த தருணம் 

இதன்போது தனது சகோதரனை சாந்தன் ஏக்கத்துடன் பார்ப்பதுவும் அவரை ஆரத்தழுவுவதுவும் தற்போது காணொளியாக வந்து அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

தாயகம் திரும்புவதற்கான பூரிப்பில்

பல்வேறு தடைகளையும் தாண்டி தாயகம் திரும்புவதற்கான  பூரிப்பில் இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தமை குடும்பத்தினரை மட்டுமல்லாது பலரையும் கவலையடையச் செய்துள்ளது.