இலங்கையில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு..! சுட்டிக்காட்டிய ஜி. சமல் சஞ்சீவ

0
96

குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளாதக  ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான எடை இழப்பு அல்லது உடல் ஊனமுற்ற சிறுவர்கள் பதிவாகியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை உட்பட நாடளாவிய ரீதியில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக ஒரு வருடத்திற்கு முன்னர் அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் முன்னாள் சுகாதார அமைச்சரின் செயலாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் நீக்கப்பட்டதாகவும் வைத்தியர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டினார்.

உண்மைகளைக் கலந்தாலோசிக்காமல் சுகாதார அமைச்சகத்திடம் இருந்து. குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கைகளின்படி,

2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், குழந்தைகளின் உயரம் குறைப்பு மற்றும் எடை இழப்பு போன்ற ஊட்டச்சத்து நெருக்கடிகள் நாடு முழுவதும் காணப்படுகின்றன, என்றார்.