பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

0
100

தமிழக மீனவர் பிரச்சினையில் தலையிடாத மத்திய அரசை கண்டித்து நாளை பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதில் ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாடோ ஆகியோர் முன்னிலையில் நாளை இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடலில் மீனவர்களை ஒன்று திரட்டி கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் நாளை மறுதினம் 28 ஆம் திகதி புதன்கிழமை தூத்துக்குடி – குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் போராட்டங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.