கேரவேனில் ஜோதிகா..! நடிகர் தலைவாசல் விஜய் பகிர்ந்துகொண்ட தகவல்

0
98

 நடிகை ஜோதிகாவுடன் தான் நடித்த அனுபவங்களை பேட்டி ஒன்றில் நடிகர் தலைவாசல் விஜய் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஜோதிகா

தமிழ்நாட்டின் மருமகள் என குறிப்பிடப்படும் நடிகை ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு, சிறுது இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த “காதல் தி கோர்” நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஹிந்தியில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோருடன் அவர் “சைத்தான்” என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

பிரபல துணை நடிகரான தலைவாசல் விஜய், தான் ஜோதிகாவுடன் நடித்த அனுபவங்களை பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

கேரவேனில்

அவர் அளித்த பேட்டியில், பேரழகன் படத்தில் தான் நடித்த போது, ஒரு முறை தனக்கு அதிகமாக முதுகு வலி ஏற்பட்ட போது, விஷயம் அறிந்த ஜோதிகா தன்னை அவரது கேரவேனில் சென்று படுக்கும் படி கூறியதாக குறிப்பிட்டார்.

அதனை தனது சினிமா வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று என்று தலைவாசல் விஜய் தெரிவித்துள்ளார்.