வீதியை விட்டு விலகி மதிலை உடைத்த பட்டா வாகனம்! யாழில் சம்பவம்

0
86

யாழில் பொச்சு மட்டைகளை ஏற்றி வந்த பட்டா வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி நுணாவில் A9 வீதியில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியிலிருந்து பொச்சு மட்டைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போதே விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.