தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!

0
101

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றையதினம் (22) ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது இன்று வெள்ளிக்கிழமை (23) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை விகாரைக்கு எதிரான இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.