கனடாவுக்கு அனுப்புவதாக 7.5 கோடி மோசடி..! யாழில் சம்பவம்

0
101

கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை களின்போதே இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸார் அறிவுறுத்தல் 

இதேவேளை – கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.