முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய நீதிமன்றத்தில் சமூகமளிக்காமை தொடர்பில் வெளியான காரணம்..

0
123

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு அவர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினாலேயே அவர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வழக்குடன் தொடர்புடைய ஏனைய ஏழு சந்தேக நபர்களும் இன்று(15) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தில் சமூகமளிக்காமை தொடர்பில் வெளியான காரணம் | Case Against Keheliya Today

பாவனைக்கு உதவாத தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த 2 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த 03 ஆம் திகதி அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​அவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தில் சமூகமளிக்காமை தொடர்பில் வெளியான காரணம் | Case Against Keheliya Today

அதன் பிரகாரம் இன்றைய தினம் (15) அவருக்கு எதிரான வழக்கு மாளிகாகந்தை நீதிமன்ற நீதவான் லோசனா அபேவிக்கிரம முன்னிலையில் சற்று முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.