கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சனத் நிஷாந்த இறப்பதற்கு முன்னர் முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார் .
இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் உறுதிப்படுத்திருந்தது.
முகப்புத்தக பதிவு
இந்நிலையில், சனத் நிஷாந்த இன்று அதிகாலை 1.37 மணிக்கு தனது முகப்புத்தகக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
முகப்புத்தக பக்கம் ஒன்றினால் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றையே அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
“வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் மனிதர்களைக் கணிப்பிட வேண்டாம். இன்று சமூகத்தில் பெரும்பாலானோர் இதனையே செய்கின்றனர்.” – என்று அந்த காணொளி பதிவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.