சனத் நிஷாந்தவின் கடைசி திக் திக் நிமிடங்கள்…!

0
164

‘தம்பி மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்…’, ‘கால்களை இழுக்க வேண்டாம் தம்பி… தூக்கி எடுங்கள் மகன்… ஒரு வாகனம் வரும் வரை அப்படியே வைத்துக்கொள்வோம்…’

‘வரும் வாகனத்தை நிறுத்தி அனுப்ப முடியாதா? பொலிஸாரும் இருக்கின்றனர்… அவர்களால் நிறுத்தமுடியாதா ? ‘, “தம்பி அவர் இறந்துவிட்டார் போல்.. மூச்சு விடவே இல்லை..

சனத் நிஷாந்தவை காப்பாற்ற முயற்சித்தவர்களின் உரையாடலே அது..

ஆனாலும், துரதிஷ்டவசமாக அவரின் உயிர் அவரை விட்டு பிரிந்தே சென்றிருந்தது. இது இவ்வாறிருக்க விபத்தின்போது எடுக்கப்பட்ட காணொளியொன்றும் எமக்கு கிடைத்துள்ளது. கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் உயிரை காப்பாற்றும் முயற்சியை கீழே பாருங்கள்…👇

நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று அதிகாலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மிக மோசமான வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

(ஆனால், அதற்குள் அவ்விடத்திற்கு வந்த சிலர் பிறரை மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்….)

விபத்தின் போது, எதிரே வந்த பாரவூர்தி, கார் மீது பாரதூரமாக மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

(சம்பவம் தொடர்பில் கொள்கலன் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சற்று முன்னர் தெரிவிக்கப்பட்டது…)

இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பலர் அமைச்சரின் உடலைப் பார்ப்பதற்காக சென்றிருந்தனர். இந்த சோகமான சம்பவத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியாகி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அமைச்சர், கல்யாண விருந்துபசாரத்து வந்ததாகவும், திரும்பி வரும் வழியில் விபத்து நேர்ந்ததாகவும் இளைஞர் ஒருவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.