பொங்கு தமிழ்ப் பிரகடனம்: 23ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலையில் அனுஷ்டிப்பு

0
119

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மா.இளம்பிறையன், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் தமிழ் மக்களின் அபிலாசைகள், சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.