நடிகர் விஜயகாந்த் மகனுக்கு தன்னால் முடிந்த ஒரு உதவியை செய்யப் போவதாக ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் அறிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவின் போது வர முடியாத சிலர், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா உள்ளிட்ட பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் காட்சிகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது அம்மாவுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சினிமாவில் எத்தனையோ பேரை கரையேற்றி விட்டவர் விஜயகாந்த். அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யலாம் என்கிற எண்ணம் தனக்குள் தோன்றியது என்றும் சண்முக பாண்டியன் நடித்துவரும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
மேலும், யாரிடமாவது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் தானும் சண்முக பாண்டினும் அந்தப் படத்தில் நடிக்க தயார் என்றும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
I’m happy to share with you all that I’m ready to do a cameo role in captain sir’s Son Shanmuga Pandian’s movie as my respect and love for Vijayakanth sir 🙏🏼 pic.twitter.com/zIlNBqnVs2
— Raghava Lawrence (@offl_Lawrence) January 10, 2024