“சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்தவர் இன்று போதி தர்மர்“: எகிப்தில் இருந்து இலங்கை வந்த ஆசாமியின் உண்மை கதை என்ன?

0
186

இலங்கையை பிறப்பிடமாகவும் எகிப்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் தான் மகிந்த கொடிதுவக்கு. இவர் தற்போது எகிப்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவரை பார்த்த இடங்களில் எல்லாம் பொது மக்கள் கையெடுத்து வணங்குகின்றார்கள். காலில் விழுந்து ஆசீர் பெறுகின்றார்கள். அதில் பௌத்த மதகுருமாரும் அடங்குகின்றார்கள்.

ஏன் அவரை அனைவரும் வணங்குகின்றார்கள்? காரணம் என்ன?

மகிந்த கொடிதுவக்கு தன்னை ஒரு இறைவனின் பிரதிநிதி என சொல்லிக்கொண்டு சமூகத்தை ஏமாற்றி வாழும் ஆசாமி. இவரின் மாயைகளை கண்டு அதில் திளைத்து போன பொதுமக்கள் அவரை கடவுளின் பிரதிநிதி என நம்புகின்றார்கள். அதனால் அனைவரும் அவரை கடவுளை போல் தொட்டு வழிபடுகின்றார்கள்.

கீமே காணும் காணொளியில் அதை காணலாம்…👇

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகவே நாம் அது தொடர்பில் ஆராய ஆரம்பித்தோம். அதில் எமக்கு அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் கிடைத்தன.

Oruvan

எகிப்தில் எடுக்கபட்ட ஒரு புகைப்படம்

தன் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்

இவர் முற்றிலும் ஒரு போதைக்கு அடிமையானவர் என பல தகவல்கள் அம்பலாமாகியுள்ளன. மேலும் பூஜ்ய பலாங்கொட கஸ்ஸன தேரர் இவர் தனது சொந்த மகளையே துஷ்ப்பிரயோகம் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை தாம் வெளியிட தயாராக உள்ளதாக பொலிஸில் தற்போது முறைப்பாடும் செய்துள்ளார்.

மேலும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்து, எகிப்தில் குறித்த நபர் நாய்களை பராமரிக்கும் வேலைகளை செய்து வந்தார் என்பதையும் அண்மையில் கஸ்ஸன தேரர் அம்பலப்படுத்தியிருந்தார். மகிந்த கொடித்துவக்கு போதைக்கு அடிமையானவர் என்பதையும் புகைப்பட ஆதாரம் மூலம் நிரூப்பித்திருந்தார்.

Oruvan

மதுபானம் மற்றும் சிகரெட்டுடன் மகிந்த கொடிதுவக்கு

மகிந்த கொடிதுவக்கு பற்றி பூஜ்ய பலாங்கொட கஸ்ஸன தேரர் வெளியிட்ட தகவல்கள் என்ன?

‘இவர் மிகவும் விசித்திரமான நபர். இவர் ஜனவரி 1, 2024 அன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவருக்கு பின்னால் இருப்பது யார்? இவற்றின் அடிப்படை என்ன? என்பதை கண்டறிய வேண்டும்.

குறித்த நபரின் ஒருசில பிரசங்கங்களைக் கேளுங்கள். சமீபநாட்களில் மதவெறிப் பிரசங்கங்களைக் கேட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் இலங்கையில் அதிகம். இது யாவரும் அறிந்ததே.

‘அவன் தன் மகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. (ஒலிப்பதிவு ஒன்றையும் அவர் முன்வைத்துள்ளார்.)

இந்த குற்றச்செயலை மறைக்கவே தனது உடலுக்கு தீ வைப்பது போல் பாசாங்கு செய்துள்ளார். பின் புத்தபெருமானுக்காக இவ்வாறு செய்ததாக மகிந்த கொடிதுவக்கு தன் மனைவியிடம் குறிப்பிட்டுள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார். அவருடைய பொய்ப் பிரச்சாரங்களை கண்டு பொது மக்கள் ஏமாறுகிறார்கள்.

அவர் தனது குழந்தையை துஷ்பிரயோகம் செய்துள்ளமையால் அவரின் மனைவி அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்“ எனவும் தேரரின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Oruvan

பூஜ்ய பலாங்கொட கஸ்ஸன தேரர்

விசாரணை ஆரம்பம்

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் இவ்வாறு வெளியாகும் காணாளிகளை கண்டு ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர்.

பூஜ்ய பலாங்கொட கஸ்ஸன தேரர் இந்த சம்பவம் தொடர்பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து தேரர்கள் மொளனம் காப்பது ஏன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.