அமெரிக்காவில் உரிமையாளரின் பணத்தை விழுங்கிய செல்லப்பிராணி

0
150

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தனது உரிமையாளரின் ரூ.3.31 லட்சத்தை விழுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் செசில் என்ற வளர்ப்பு நாய் அதன் உரிமையாளர் சேமித்து வைத்திருந்த ரூ.3.31 லட்சம் பணத்தை விழுங்கியுள்ளது.

இந்த நிலையில், நீண்ட நேரமாக பணத்தை தேடிக் கொண்டிருந்த உரிமையாளர்கள், தங்களின் பணம் காணவில்லை என்று அதிர்ச்சியில் இருந்தனர்.

அமெரிக்காவில் உரிமையாளரின் பணத்தை விழுங்கிய செல்லப்பிராணி | The Pet That Swallowed The Owner S Money In Usa

இந்நிலையில், பணத்தின் உரிமையாளர் தனது விட்டில் வளர்க்கப்பட செல்ல நாய் வாந்தியெடுத்துள்ளது. அப்போது, நாய் வாயிலிருந்து வெளி வந்த பணத்துண்டுகளை பார்த்து அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். அதனைக் கண்ட உரிமையாளர் பணத்தை நாய் உண்டிருப்பதை உறுதி செய்தார்.

மேலும், நாய் வெளியே எடுத்த நோட்டுகளை மட்டும் சுத்தம் செய்தார். அதன் பிறகு உரியமையாளர் அந்த பணத்தை வங்கியில் கொடுத்து புதுப்பித்துள்ளார்.