நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு நடிகர் அஜித்குமார் துபாயில் ஓய்வெடுத்து வருகிறார்.
அவருடன் ஷாலினியும் துபாயில் இருக்கும் நிலையில், இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.