19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிகெட் அணி பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி

0
172

துபாயில் நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கட் சம்பியன்ஷிப் போட்டிக்காக இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினர் இன்று (06ஆம் திகதி) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட அணியின் தலைவராக கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த சினெத் ஜெயவர்தன உள்ளார். தலைவர் சினெத் ஜயவர்தன கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேசுகையில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிகெட் அணி பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி

‘நாங்கள் நல்ல மனநிலையில் இருக்கிறோம். கடந்த பாகிஸ்தான் போட்டி உட்பட பல போட்டிகளில் வென்றுள்ளார். பல்லேகல மற்றும் காலி மைதானங்களில் பல பயிற்சிப் போட்டிகளிலும் பங்குபற்றினர்.

எனது குழு எனக்கு தேவையான ஆதரவை அளிக்கிறது. ஆசிய சாம்பியன்ஷிப்பை வெல்வது எங்கள் நம்பிக்கை’ என்றார். போட்டிகள் எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி எதிர்வரும் 09ஆம் திகதி ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

இலங்கை இளைஞர் கிரிக்கெட் அணி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஈ.கே. 649 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி புறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.