சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நோட்டிஸ்கள் சுவிஸ் இல் உள்ள பல்வேறு அங்காடிகளிலும் கடைகளிலும் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
![சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அஞ்சலி! | Tributes Leader Ltte Many Places In Switzerland சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அஞ்சலி! | Tributes Leader Ltte Many Places In Switzerland](https://cdn.ibcstack.com/article/50198adf-b5bc-461b-93ac-7c4e77280ce9/23-6569da6918a6d.webp)
ஈழத்தின் இறுதிப்போர்
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரிழந்து விட்டதாக, அப்போதைய மஹிந்த ராஜபக்க்ஷ தலமையிலான இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் விடுதலைபுலிகளின் தலைவர் உயிரிழப்பு மர்மமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது, விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நோட்டிஸ்கள் சுவிட்சர்லாந்தில் ஒட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அஞ்சலி! | Tributes Leader Ltte Many Places In Switzerland சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அஞ்சலி! | Tributes Leader Ltte Many Places In Switzerland](https://cdn.ibcstack.com/article/3d25838c-3bf9-4baf-a97c-f45862cb5c3a/23-6569da69e4b1f.webp)
அத்துடன் அது தொடர்பிலான புகைப்படங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.