இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய யாழ் பாடகி கில்மிஷா! குவியும் வாழ்த்துக்கள்

0
195

சரிகமபா நிகழ்வில் இரண்டாவது இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள யாழ். பாடகி கில்மிஷாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இலங்கையில் இருந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் தனக்கான அடையாளத்தினை பாடல் நிகழ்ச்சியான சரிகமபாவில் கில்மிஷா பெற்றுள்ளார். நாளுக்கு நாள் அவரின் திறமைகளை பார்க்கும் போது பார்வையாளர்களான நமக்கு வியப்பாக இருந்தது.

இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது நபராக தெரிவாகியிருக்கும் கில்மிஷாவுக்கு உலக வாழ் தமிழர்களும் ஆதரவுடன், வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.