யாழில் மகளை சித்திரவதை செய்த தந்தைக்கு 2 வருட சிறைத்தண்டனை!

0
191

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வாய் பேசாத முடியாத பெண்ணை திருமணம் செய்திருந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்து மனைவி கணவனை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

 தன்னுடன் இருந்த 04 வயது மகளை மிக மோசமாக சித்திரவதை புரிந்து , அடித்து துன்புறுத்தி அதனை காணொளியாக சமூக வலைத்தளங்களில் சிறுமியின் தந்தை பகிர்ந்து உள்ளார்.

பொலிஸ் விசாரணை

ஊர்காவற்துறை நீதவானின் கவனத்திற்கு காணொளி சென்றதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சிறுமியை தாக்கிய தந்தையை கைது செய்ததுடன் , சிறுமியையும் மீட்டு இருந்தனர்.

மீட்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கு பின்னர் , சிறுவர் நன்னடத்தை பிரிவின் ஊடாக சிறுவர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்ட நிலையில் , சிறுமியை தாக்கிய தந்தையை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ளது.