Visitor Visa வில் கனடா சென்ற யாழ் யுவதி; கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டர்!

0
169

யாழிலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா பெறுவற்காக கொடுத்த தகவல்களும் விசாரணைகளின் போது கொடுத்த தகவல்களும் மாறுபட்டவையாக இருந்ததாக கூறப்படுகின்றது.

கனடா வழங்கியுள்ள சலுகை

அத்துடன் யுவதியை அழைத்த சகோதரி குடும்பத்தினர் வழங்கிய தகவல்களும் தவறானவையாக இருந்த காரணத்தாலும் மேற்படி யுவதி திருப்பி அனுப்பபட்டதாக தெரியவருகின்றது.

அதேவேளை  அண்மைய நாட்களாக கனடா வழங்கியுள்ள விசா சேவையில்  இலங்கையர்கள் பலரும் தங்கள் உறவினர்கள் மற்றும் நணபர்களை  கனடாவிற்கு அழைப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

பல லட்சங்களை செலவழித்து ஏஜெண்டுகளின் மூலம்  கனடா செல்ல விரும்பும்  வடக்கு மக்கள் அதிலும் யாழ்ப்பாண மக்கள்  மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக  செல்லும் பலர்  கனடாவை சென்றடைவதில்லை என்பது கவலைக்குரிய விடயம்

இந்நிலையில் கனடா வழங்கியுள்ள சலுகையை பயன்படுத்தி  கனடா வாழ் புலம்பெயர்  உறவுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தங்கள் உறவுகளை  கனடாவுக்கு எடுப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே ஒருவருக்கொருவர்  வழங்கும் தகவல்களை  முரண்பாடாக வழங்காது சரியான தகவல்களை  வழங்கினால் , கனடாவரை சென்று  யாழ் யுவதி திரும்பியதுபோல  மற்றவர்களுக்கும்  இந்த   நிலமை  ஏற்படாது தவிர்க்கலாம்.