கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்.. மூவர் அதிரடி கைது!

0
130

கிளிநொச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் கடந்த 25ம் திகதி இரவு 10 மணியளவில் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர்  அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தரே உயிரிழந்தார்.

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்: பெண் உட்பட மூவர் அதிரடி கைது! | Young Family Member Murder Kilinochchi 3 Arrested

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார் ஒரு பெண் உட்பட மூவரை இன்றைய தினம் (27-10-2023) பிற்பகல் கைது செய்துள்ளனர்.

உயிரிந்தவரை தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.