பலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்; கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
143

காஸா முற்றுகையை உடனடியாக நீக்குமாறும், பலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் கோரி இன்று மாலை 3.30 மணிக்கு கோட்டை பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு நடவடிக்கை குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

முழு ஏகாதிபத்திய அமைப்பும் மூன்றாம் உலகப் போருக்கான திட்டங்களை வகுத்து வருகின்றன என கொழும்பு நடவடிக்கை குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலஸ்தீன மக்களின் போராட்டத்தை பாதுகாப்பதற்காக முன்வைத்துள்ள முன்மொழிவுகளுக்கு ஆதரவாக நிற்கும் கொழும்பு நடவடிக்கை குழு, குறித்த போராட்டத்தில் மக்களை அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.