இந்தியாவின் நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை (14.10.2023) காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார்.
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை (15.10.2023) இரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும் திங்கட்கிழமை (16.10.2023) மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.