தெற்கு காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி எகிப்து ரஃபா எல்லையை குறுகிய காலத்திற்கு திறக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் எகிப்தின் தலையீட்டின் பேரில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நீடிக்கும் போர்
அதேவேளை கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.