மனிதர்களை நடைப்பிணங்களாக மாற்றும் சோம்பி ட்ரக்ஸ் என்ற போதைப் பொருள் இலங்கைக்குள் பரவியுள்ளதாகவும் அது ஹெரோயின் போதைப் பொருளை விட 50 மடங்கு ஆபத்தானது எனவும் போதை பழக்கத்தில் விடுப்பட சிகிச்சையளிக்கும் மருத்துவர் விராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். சோம்பி ட்ரக்ஸ் என்பது விலங்குகளை மயக்கமடைய செய்ய பயன்படுத்தும் மருந்து. இந்த போதைப் பொருளை பயன்படுத்தும் நபரின் மூளை செயற்திறனை இழக்கும். இறந்த உடலுக்கு உயிர் வந்தது போல இருக்கும்.
அமெரிக்காவில் சில மாநிலங்களில் உள்ள நகரங்களில் சோம்பி நிலையில் பலர் இருப்பதை காணக்கூடியதாக இருக்கும். சோம்பி நிலையில் இருப்பவர் தனக்கு என்ன நடக்கின்றது என்பதை அறிய மாட்டார்.
சோம்பி நிலைக்கு மாறும் நபர்கள் சில நேரம் வன்முறையாக நடந்துக்கொள்வர்கள். அவர்கள் சுயக்கட்டுப்பாட்டை இழந்து விடுவார்கள்.
இந்த சோம்பி ட்ரக்ஸ் என்ற போதைப் பொருளை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இலங்கையில் எந்த அளவுக்கு இந்த போதைப் பொருள் பரவியுள்ளது என்பது தெரியாது.
நாட்டை ஆட்சி செய்பவர்கள், சட்டத்தை பாதுகாப்பவர்கள் போதைப் பொருள் மூலம் நன்மைகளை பெற்று வருவதால், போதைப் பொருளை ஒழிக்கும் தீர்வுகளை முன்வைக்க அக்கறை காட்டுவதில்லை எனவும் மருத்துவர் விராஜ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.