கனடாவின் இந்தியா மீதான குற்றச்சாட்டில் அமெரிக்கா அதிருப்தி!

0
214

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் கொலை சம்பவத்தை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கிய காரணமாக இருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளமையால், இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்ற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா கவலை

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் கூறுகையில், “ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன.

கனடாவுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம், கனடாவின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது மிகவும் முக்கியமான விடயமாகும்” என தெரிவித்துள்ளார்.