தமிழகத்தின் 1,591 புதிய வீடுகள் இலங்கைத் தமிழா்களுக்கு கையளிப்பு

0
67

தமிழகத்தின் 13 மாவட்டங்களிலுள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் 79.70 கோடி ரூபா செலவில் புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,591 புதிய வீடுகளை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரிலுள்ள மேல்மொணவூா் முகாமில் 11 கோடி ரூபா மதிப்பில் 220 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இலங்கை தமிழர்களிடம் கையளித்தார்.

அத்துடன் இலங்கை தமிழர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் அவர் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக, தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்து மேல்மொணவூரில் ஆரம்பித்தார்.