விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபா..

0
224

ஹொரபே ரயில் விபத்தில் உயிரிழந்த  இளைஞரின் குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபாவை வழங்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனைத் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக  பல்கலை  மாணவனான குறித்த  இளைஞர்  புகையிரத்தின் கூரையில் பயணம் செய்த நிலையில் தவறி விழுந்து  உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.