கொழும்பில் முக்கிய வீதி ஒன்றை முட்கம்பி வேலி அமைத்து மூடிய அதிகாரிகள்!

0
226

இலங்கையில், ஹோமாகம மீகொடை நடுஹேன, ரந்திய உயன மற்றும் கரல் அமுஹேன ஆகிய பகுதிகளை இணைக்கும் வீதி ஒன்றை துாண்களுடன் முட்கம்பி வேலி அமைத்து மூடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த நடவடிக்கை ஹோமாகம பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குறித்த வீதியை சுமார் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் எந்தவொரு ஆவணத்திலும் அவ்வாறான வீதி தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என ஹோமாகம பிரதேச சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் முக்கிய வீதியொன்றை முட்கம்பி வேலி அமைத்து மூடிய அதிகாரிகள்! | Officials Closed Main Road Homagama Council
கொழும்பில் முக்கிய வீதியொன்றை முட்கம்பி வேலி அமைத்து மூடிய அதிகாரிகள்! | Officials Closed Main Road Homagama Council