இலங்கையில் போராட்டத்தின் போது ராணுவ பேருந்துக்கு தீ வைத்த நபர் கைது

0
190

மிரிஹான பகுதியில் இடம்பெற்ற கலவரத்தின் போதுப் இராணுவத்தினரின் பேருந்துக்கு தீ வைத்த சந்தேக நபரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மஹியங்கனை பூஜா பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.