கொழும்பில் மெனிங்கோகோகஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம்…

0
143

இலங்கை  –  காலி சிறைச்சாலையில், கைதிகள் இரண்டு பேர் உயிரிழந்தமைக்கு காரணமாக அமைந்த மெனிங்கோகோகஸ் (Meningococcus) பற்றீரியா தொற்றுடன் ஒருவர் ரத்மலானை சுகாதார வைத்திய அதிகார பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரத்மலானை பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் ஜாஎல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இந்த நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் காலி சிறைச்சாலையில், கைதிகள் சிலர் மெனிங்கோகோகஸ் (Meningococcus) பற்றீரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் 2 பேர் உயிரிழந்திருந்தனர்.

பின்னர் சிறைச்சாலையிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், சிறைச்சாலைக்கு புதிய கைதிகளை அனுமதிப்பதற்கும் அவர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தவும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

கொழும்பில் மெனிங்கோகோகஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் | Identify Someone With Meningococcus Infection

காய்ச்சல், தலைவலி, கழுத்து வலி, வாந்திபேதி, உடலில் வெடிப்புகள் தோன்றுதல் என்பன மெனிங்கோகோகஸ் (Meningococcus) பற்றீரியா தொற்றுக்கான அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் சில வாரங்களில் அத் தொற்றை குணப்படுத்த நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார துறை குறிப்பிட்டிருந்தது.

இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டாவது சி.ரி.ஸ்கேன் பரிசோதனை இயந்திரம் நேற்று முதல் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அரச கதிரியக்க தொழிநுட்ப நிபுணர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் சுமார் 250 சி.ரி ஸ்கேன் பரிசோதனைகளை முன்னெடுக்கும் இயந்திரமே செயலிந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்