ஜெரோம் பெர்னாண்டோ தவறை ஏற்றுக்கொண்டால் மன்னிக்க தயார்; சோபித தேரர்

0
184

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது தவறை ஏற்றுக்கொண்டால் அவரை மன்னிக்கத் தயார் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்து காரணமாக புத்தர் அவமதிக்கப்பட்டதாக சமூகத்தில் கருத்து நிலவுவதாகவும் சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் அவரைச் சந்திக்க வந்து தங்கள் மகனின் குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இன்றைய உலகம் மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தக்கூடாது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற இணக்கமான கலந்துரையாடல் மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.