கல்லறையில் இருந்து வந்த அலறல் சத்தம்.. உயிருடன் புதைக்கப்பட்டாரா பெண்!

0
221

புதைக்கப்பட்ட பெண் ஒருவர் கல்லறையில் வந்த சத்தம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதைக்கப்பட்ட பெண்

பிரேசில் நாட்டில், கடந்த 2018-ம் ஆண்டு 37 வயதான ரோசங்கலா அல்மேடா என்ற பெண் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு Riachao das Neves என்ற நகரில் இறுதி சடங்கு நடத்தப்பட்டு, மறுநாள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

பின்னர், அவரது அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்ட சிலர் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் அந்த பெண்ணின் கல்லறையை தோண்டி எடுத்தனர். அப்பொழுது அவரது மணிக்கட்டு மற்றும் நெற்றியில், ரத்தக் காயங்கள் இருந்துள்ளது. மேலும், அந்த சவப்பெட்டியில் மூடியும் சிறிது தளர்ந்து இருந்தது.

விசாரணை

இந்நிலையில், அந்த பெண்ணின் குடும்பனத்தினர் அவரை அடக்கம் செய்யும்பொழுது அவரது உடலில் ரத்த காயம் எதுவும் இல்லை என்று உறுதியாக கூறியுள்ளனர். ஆனால், பின்னர் தோண்டி எடுத்ததும் அவர் உயிருடன் இல்லை.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அதில் அந்த பெண்ணின் அலறல் சத்தம் மற்றும் பெட்டியை இடிக்கும் சத்தம் கேட்டு தான் கல்லறையை உடைத்ததாக கூறியுள்ளனர்.

கல்லறைக்கு இரையூரு விளைவித்த இந்த குற்றத்திற்கு பிரேசிலிய சட்டத்தின்படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இறுதியில், சிவில் அதிகாரிகள் அந்த பெண் உயிருடன் புதைக்கப்படவில்லை என்று தீர்மானித்து வழக்கை முடித்து வைத்தனர்.