திருகோணமலையில் விகாரை கட்டுவதை தடுக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம்..

0
191

திருகோணமலையில் விகாரை கட்டுவதை தடுக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகளால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகாரையின் நிர்மாணப் பணி

திருகோணமலை இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டம் இன்று (12) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம்.

வரலாற்று சான்றுகளை கிளறுகின்ற R.சம்பந்தன், புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.